ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இதில், மக்கள் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை