ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது140 கோடி இந்தியர்களும் தீபம் ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தி: அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதிநடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமானநிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கிவைப்பதற்காக நேற்று அயோத்தி சென்ற பிரதமர் மோடியை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை