கிராம சுயாட்சியில் புதிய மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் கிராம சுயாட்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, நாட்டின் வளர்ச்சிக்காக கிராம தலைவர்கள் ஆற்றிவரும் பங்கை பாராட்டி அவர்களுக்குப் பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். தங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் யோகா பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச யோகா தினத்தன்று, யோகா பயிற்சி மேற்கொள்ள ஊரில் உள்ள பழமையான அல்லது சுற்றுலா தலம் அல்லது நீர்நிலைகளை தேர்ந்தெடுக்கலாம். பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை மற்றவர்களுக்கு அனுப்பி வையுங்கள். அது அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை