நாட்டின் மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

பெங்களூரு: ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்த் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பெங்களூருவில் நாட்டிலே மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையத்தை பெங்களூருவில் புதன்கிழமை திறந்தது. கர்நாடக தொழில் மேம்பாட்டு துறையின் விண்வெளி பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

இதில் ஒரே நேரத்தில் நான்கு பெரிய விண்கலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனையை நடத்த முடியும். இந்த மையத்தில் உள்ள 4 அலகுகளும் தனித்தனியாக இயங்குபவை. விண்கலங்களை சோதிக்கும்போது இந்த அலகுகள் தனியாகவே இறுதிநிலை வரை ஒருங்கிணைப்பு சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை