குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு - மம்தா தலைமையில் தலைவர்கள் ஆலோசனையில் நடந்தது என்ன?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்துகொண்டன.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்க உள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வாக்குகளில் சுமார் 48 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை