தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி காஷ்மீரை விட்டு வெளியேறும் பண்டிட் குடும்பங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பண்டிட் ஊழியர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் மற்றும் பள்ளி ஆசிரியை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது காஷ்மீர் பண்டிட் குடும்பங்களைிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பண்டிட் ஊழியர்கள், தங்களை, இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை அரசு தரப்பு ஏற்கவில்லை. அதனால் இந்த விஷயத்தில் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி தலையிட்டு, அச்சத்தில் உள்ள பண்டிட் குடும்பங்களை காஷ்மீரை விட்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என காஷ்மீர் பண்டிட்கள் சங்கம் (கேபிஎஸ்எஸ்) கோரிக்கை விடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை