கேரள தங்கக் கடத்தல் | முதல்வர் பினராயி, குடும்பத்தினருக்கு தொடர்பு - பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கொச்சி: தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ஒரு பார்சலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இருந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அந்த பார்சலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணைத் தூதரக முகவரிகுறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், யுஏஇ துணைத் தூதரகத்துக்கு உள்ள சட்ட பாதுகாப்பை பயன்படுத்தி தொடர்ந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை