அலிகர் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர் தொழுகை: கட்டாய விடுப்பில் அனுப்பிய நிர்வாகம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரின் ஸ்ரீவார்ஷ்னே கல்லூரியின் பேராசிரியர் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பால், அவரை ஒரு மாதம் கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரில் இயங்கி வருகிறது ஸ்ரீவார்ஷ்னே கல்லூரி. கடந்த 1922ல் சிறிய அளவில் ஒரு பள்ளிக்கூடமாகத் துவங்கிய இது, படிப்படியாக வளர்ந்து 1947ல் கல்லூரியானது. இதில், பயிலும் சுமார் 6,000 பேரில் அதிகமாக 4,000 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். உபி அரசின் உதவிபெறும் கல்லூரியான இது, ஆக்ராவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை