நூபுர் சர்மா சர்ச்சை | அஃப்ரீன் பாத்திமா வீட்டை புல்டோசரால் இடித்தது ஏன்? - உ.பி போலீஸ் விளக்கம்

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிரதான காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் ஜாவேத் முகமது வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டு இருந்ததாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். ஜாவேத், அஃப்ரீன் பாத்திமாவின் தந்தை. அவரது வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து உள்நாடு, வெளிநாடு என பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த வெள்ளி (ஜூன் 10) அன்று பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 130-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை