ஜம்மு காஷ்மீரில் ஒரே வாரத்தில் இந்துக்கள் உட்பட 8 பேர் படுகொலை - அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

புதுடெல்லி: காஷ்மீரில் ஒரே வாரத்தில் இந்துக்கள் உட்பட 8 பேர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்தும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அமர்நாத் யாத்திரை ஏற்பாடுகள் தொடர்பாகவும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர், காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை