75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பார்வையற்றோரும் அறியும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிட்டார் பிரதமர்

புதுடெல்லி: பார்வையற்றோரும் அறியும் வகையில் சிறப்பு நாணயங்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் மத்திய நிதியமைச்சகம் சார்பில் சிறப்பு அடையாள வாரம் கொண்டாடப்படுகிறது. இதை டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நாணயங்களை பார்வையற்றோரும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் அடைந்ததன் 75-வது ஆண்டு விழா முத்திரையுடன் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை