அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட்டது பிசிசிஐ

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ ஏலம் விட்டது. 3 நாட்களாக நடைபெற்ற இந்த மின்னணு ஏலம் நேற்று முடிவடைந்தது. ஏலத்தின் 2-வது நாளான நேற்று முன்தினம் ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. ஒரு ஆட்டத்துக்கு ரூ.57.50 கோடி வீதம் 410 ஆட்டங்களுக்கு இந்த தொகையை ஸ்டார் குழுமம் செலுத்தும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை