"ஏழைகளுக்கு 100% அதிகாரம் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது" - பிரதமர் புகழாரம்

காந்திநகர்: முந்தைய தலைமுறையினர் எதிர்கொண்ட பிரச்சினைகளை இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் நவ்ராசியில் உள்ள பழங்குடியினர் பகுதியான குட்வேலில் நடைபெற்ற ‘குஜராத் பெருமை இயக்கம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்றார். அப்போது அவர், 7 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 14 திட்டங்களுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் பட்டேல், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை