மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக், 8 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து அசத்தினார். அவரது ஆட்டத்தை பார்த்தது அவருக்கு முன் தலைவணங்கினார் விராட் கோலி.
நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி. அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது டூப்ளசி, ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம். அதன் பலனாக அந்த அணி 192 ரன்கள் குவித்தது. அதோடு இந்த போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports