IPL 2022 | வீணான பும்ராவின் அதிரடி ஸ்பெல்... மும்பையை வீழ்த்தி பிளே ஆப் போராட்டத்தில் நீடிக்கும் கொல்கத்தா

ஐபிஎல் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஓப்பனிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு இம்முறை அதிரடி துவக்கம் கொடுத்தார் வெங்கடேஷ் ஐயர். மும்பை அணியின் பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர், 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதேபோல் நிதிஷ் ராணா 43 ரன்கள் எடுத்தார். ஓப்பனிங்கும், ஒன்டவுன் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஆர்டரும் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா கொல்கத்தா பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் ஆக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை