மருத்துவ சோதனையில் ‘ஆண்’ என அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் ஊரக காவல் துறைக்கான பெண் காவலர் தேர்வு கடந்த 2018-ல் நடந்தது. இதில் எஸ்சி பிரிவில் பெண் ஒருவர் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் ணுக்கு கருப்பை இல்லை என்பதும் அவரது உடலில் ஆண், பெண் குரோமோசோம்கள் உள்ளதும் தெரிந்தது.

இதையடுத்து அந்த பெண் ணுக்கு, ‘ஆண்’ என மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் இவரது தேர்வு ரத்தானது. இதை எதிர்த்து அந்த பெண் மும்பை நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ‘‘உடலில் உள்ள குரோமோசோம் மாறுபாடு பற்றி நான் அறியவில்லை. நான் பிறந் தது முதல் பெண்ணாகத்தான் வளர்ந்தேன். எனது அனைத்து கல்வி சான்றிதழ்களிலும் பெண் பெயரில்தான் உள்ளன. குரோமோ சோம் மாறுபாட்டை காரணம் காட்டி வேலை வாய்ப்பை மறுக்க முடியாது’’ என கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை