அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச சட்டங்கள் மூலம் தீர்வு - குவாட் தலைவர்கள் கூட்டறிக்கை

டோக்கியோ: உக்ரைனில் நடந்து வரும் மோதல், நிலவிவரும் துயர்மிகு மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த எங்களின் பொறுப்புகளை பற்றி விவாதித்தோம். இதன் தாக்கத்தால் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாங்கள் மதிப்பீடு செய்தோம். இந்த பிராந்தியங்களில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவதற்கு குவாட் தலைவர்கள் மீண்டும் உறுதியளிக்கிறோம். அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிரந்திய ஒருமைப்பாடு, ஐநா சாசனத்தை மதிப்பதே சர்வதேச ஒழுங்கிற்கான மையப்புள்ளி என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சுட்டிக்காட்டியுள்ளோம். அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்களின் மூலமாக அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டுக்கான குவாட் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிரமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திரமான, வெளிப்படையான இந்தியா - பசிஃபிக் பிராந்தியத்திற்கு நமது உறுதியை புதுப்பிக்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய நாம் இன்று டோக்கியோவில் கூடியிருக்கிறோம்.

கோவிட் -19 பொருந்தொற்று உலகைச் சுற்றி இன்னமும் மனிதர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையிலும், அரசுகளிடையே எதேச்சையான போக்குகள் உள்ள போதும், உக்ரைனில் சோகமான மோதல் உள்ளபோதும், நாம் உறுதியுடன் இருக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை