மதுராவின் ஷாயி ஈத்காவிலும் களஆய்வு கோரி மனு: உ.பி.யின் முகலாயர் கால மசூதிகளுக்கு வலுக்கும் சிக்கல்

புதுடெல்லி: வாரணாசியின் கியான்வாபி மசூதியை போல், மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியிலும் கள ஆய்வு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், முகலாயர்களால் கட்டப்பட்ட உத்தர பிரதேச மசூதிகளுக்கு சிக்கல் வலுப்பதாகக் கருதப்படுகிறது.

உ.பி.யின் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த மசூதி, அருகில் உள்ள விஸ்வநாதர் கோயிலை இடித்து அவுரங்கசீப் கட்டியதாகப் புகார் உள்ளது. இதன் மீதான வழக்கும் வாரணாசி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. அதேசமயம், கடந்த ஆகஸ்ட் 2021 -ல் இக்கோயிலின் சிங்காரக் கவுரி அம்மனின் அன்றாட தரிசனத்திற்காகவும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. கவுரி அம்மனின் சிலை, கோயிலினுள் அமைந்த மசூதியின் வெளிப்புற வளாகச் சுவரில் அமைந்துள்ளது. இதனால், இவ்வழக்கை விசாரிக்கும் வாரணாசியின் சிவில் நீதிமன்றம் மசூதியினுள் புகைப்படம், வீடியோ பதிவுகளுடன் களஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை