உலக சுகாதார நிறுவன விருது பெற்ற ஆஷா பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: ஆரோக்கியமான இந்தியாவை உறுதி செய்வதில் ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் முன்னணியில் உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளுக்கு நேரடி அணுகலை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும், நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த உதவியதற்காகவும் ஆஷா பணியாளர்ளுக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) நேற்று முன்தினம் விருதை வழங்கியது. இந்த டபிள்யூஎச்ஓ-வின் இயக்குநர்-ஜெனரல் உலக சுகாதார தலைவர்கள் விருது ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை