இரு சமூகத்தினர் இடையே மோதல், வன்முறை - ஜோத்பூரில் இன்று இரவு வரை ஊரடங்கு

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறையில் 4 போலீஸார் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் 10 காவல் நிலைய பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூரின் ஜலோரி கேட் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகுந்த் பிஸ்ஸாவின் சிலை உள்ளது. இச்சிலைக்கு அருகில் ரம்ஜானை முன்னிட்டு சிறுபான்மை சமூகத்தினர் நேற்று முன்தினம் இரவு தங்கள் மதக் கொடியை கட்டியுள்ளனர். அப்போது, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த காவிக் கொடி அகற்றப்பட்டதாக சிலர் ஆட்சேபம் தெரிவித்ததில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை