ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

புரி: கார் விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 198 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அவர் இரு தினங்களுக்கு (மே 14) முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை