போரில் யாரும் வெற்றி பெற முடியாது; இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது - ஜெர்மனியில் பிரதமர் மோடி கருத்து

பெர்லின்: போரினால் உக்ரைன் மக்கள் மீதான மனிதாபிமான தாக்கம் தவிர, எண்ணெய் விலை, உலகளாவிய உணவு விநியோகம் மீது ஏற்பட்டுள்ள அழுத்தம், உலகின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் அந்நாட்டு பிரதமர் ஓலஃப் ஷோல்ஸூடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், இருநாட்டு தலைவர்களும் ஒரு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது: "உக்ரைன் நெருக்கடி தொடங்கியதிலிருந்தே போரை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சைகளை தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த போரில் வெற்றியாளர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் இழப்பையே சந்திப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் அமைதியின் பக்கம் நிற்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை