'தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு' - உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு தடை விதிக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த தடையால் தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து தன்னார்வலர்கள் மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை