உ.பி. கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்தியவருக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தகவல்

லக்னோ: உத்தரபிரதேசம் கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா அப்பாஸி என்பவருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும், அவர் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கூறியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கோயிலின் தலைமை பூசாரியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த கோயிலுக்குள் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அன்று அகமது முர்தஜா(29) என்பவர் நுழைய முயன்றார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்த போது, அவர்களை அரிவாளால் தாக்கினார். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா, மும்பை ஐஐடி பட்டதாரி. இச்சம்பவம் குறித்து உ.பி. தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை