சிவலிங்கம் இருப்பதாக விஎச்பி தலைவர், உ.பி. துணை முதல்வர் தகவல் - வாரணாசி கியான்வாபி மசூதி ஒசுகானாவுக்கு சீல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இதன் வளாக சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனுக்கு நடந்த அன்றாட பூசை, 1991-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ரவிக்குமார் திவாகர் விசாரித்து மசூதி முழுவதும் கள ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கள ஆய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஆய்வின் மீதான அறிக்கை வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை