உறுதி, உண்மை, உணர்வுடன் அரசு பயனாளியை சென்றடையும் போது அர்த்தமுள்ள பலன் கிடைக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்: எனது கனவு மிகப்பெரியது. பயனாளிகளின் 100 சதவீத பயன்பாட்டை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டும். அரசு இயந்திரம் அதற்கேற்ப மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பயனாளிகளின் 100 சதவீத பயன்பாடு என்பது அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு மதம், பிரிவிற்கும் அனைத்தையும் சமமாக வழங்குவதாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பரூச்-ல் நடந்த முன்னேற்றப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். தேவையுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி வழங்கும், மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்களின் 100 சதவீத பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். நாட்டில் பெண்கள் எளிதாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கு வழி செய்ததற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்தி, மிகப் பெரிய ராக்கியை அப்பிராந்திய பெண்கள் வழங்கினர். பின்னர் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெறும் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை