இலங்கையின் ஜனநாயகம், பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனநாயகத்திற்கும், நிலைத்தன்மைக்கும், பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கும் இந்தியா முழு ஆதரவு வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

"அண்டை நாடும் வரலாற்று ரீதியிலான பிணைப்பும் கொண்ட இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் பொருளாதார மீட்சிக்கும் இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவளிக்ககும். நமது அண்டை நாட்டு கொள்கைகளின் படி, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாட்டு மக்கள் மீண்டு வருவதற்கு இந்தியா உதவி உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டுமே இலங்கைக்கு சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உதவியாக இந்தியா வழங்கியுள்ளது" என தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை