கர்நாடகா | சாலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண் வழக்கறிஞர்; உதவ யாரும் முன்வரவில்லை

பாகல்கோட்: கர்நாடக மாநிலத்தின் சாலையில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் ஒருவர், காட்டுத்தனமாக அடித்தும், உதைத்தும் உள்ளார். தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு ஆளானது பெண் வழக்கறிஞர் சங்கீதா என தெரியவந்துள்ளது. அவரை அடித்தவர் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் மகாந்தேஷ் என தெரியவந்துள்ளது. சங்கீதாவின் வயிற்றில் எட்டி உதைத்தும், கன்னத்தில் அறைந்தும் உள்ளார் அவர். அது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பலர் இருந்தும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை