அமர்நாத் யாத்ரிகர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடுத்தடுத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் உள்ளதால், ஒவ்வொரு யாத்திரிகருக்கும் ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யவும், அனைவருக்கும் தனிச்சிறப்பான ரேடியோ அலை அடையாள அட்டைகள் (ஆர்எப்ஐடி) வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அரவிந்த் மேத்தா தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை