ஜம்மு சுரங்கப்பாதை விபத்து: 36 மணிநேர மீட்புப் பணி, சடலங்களாக கைப்பற்றப்பட்ட 10 தொழிலாளர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்தில், 36 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கோனி நல்லா என்ற இடத்தில் சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சுரங்கப்பாதையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வந்தது. விபத்து நடந்த உடனே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டாலும் மீண்டும் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நிலச்சரிவு ஏற்பட, மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை