ஆந்திராவில் வினாத்தாள் கசிவு: 25 அரசு ஆசிரியர்கள் கைது

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் முதல் நேற்று வரை ஆந்திர மாநிலத்தில் பல மாவட்டங்களில் வினாத்தாள்கள் சிறிது நேரத்திலேயே கசிந்தன. வினாத்தாள் வழங்கிய சில நிமிடங்களிலேயே தெலுங்கு, ஆங்கிலம், கணக்கு போன்ற பாட வினாத்தாள்கள் கசிந்தன.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக இருந்த ஆசிரியர்கள் சிலர் செல்போனில் வினாத்தாள்களை படம் எடுத்து அதனை வெளியில் உள்ள சிலருக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் பதிலுக்கு விடையை புகைப்படம் எடுத்து பல தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை