ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பாக லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு: 16 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக சிபிஐ புதிய வழக்குபதிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை