எனது இறுதி ஆண்டுகளை நான் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறேன் - ரத்தன் டாடா

புதுடெல்லி: அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் டாடா அறக்கட்டளைகள் சார்பில் கட்டப்பட்டிருக்கும புற்றுநோய் மருத்துவமனைகளைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார்.

அஸ்ஸாம் மாநிலத்தில், மாநில அரசு ரத்தன் டாடா அறக்கட்டளைகள் சார்பில் 17 புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவைகளில் கட்டி முடிக்கப்பட்ட ஏழு அதிநவீன புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பிரதமருடன் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது," எனது இறுதி ஆண்டுகளை நான் ஆரோக்கித்திற்காக அற்பணிக்கிறேன். அஸ்ஸாம் அரசாங்கம், அஸ்ஸாமை அனைவரும் மதிக்கும் மாநிலமாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை